- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- ஒன்றிய மாநிலம்
- நாகப்பட்டினம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- யூனியன் கட்சி
- நாகப்பட்டினம் அவுரிதிடல்
- நாகை மாலி
- மாவட்ட செயலாளர்
- மாரிமுத்து
- தின மலர்
நாகப்பட்டினம்,பிப்.10: கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர் நாகைமாலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில உரிமையை பறிக்கும் செயலை வன்மையாக கண்டிப்பது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டிப்பது.
மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். திமுக மாவட்ட செயலாளர் கவுதமன், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவடம்ட செயலாளர் சிவகுருபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருட்செல்வன், திக மாவட்ட செயலாளர் பூபேஸ்குப்தா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இப்ராஹீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.